பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார்

ahmed, barley, heart attack, India, kerala, mp, New delhi
புதுடில்லி : பார்லி., கூட்டத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இருக்கையில் சரிந்த அகமது :

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள, எம்.பி.,யான, இ.அகமது, திடீரென தன் இருக்கையில் மயங்கி சரிந்து விழுந்தார்.

அருகிலிருந்த எம்.பி.,க்கள், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகில் உள்ள, ஆர்.எம்.எல்., மருத்துவமனைக்கு, அகமது அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

மாரடைப்பு:

இந்நிலையில், சிகிச்சையின் போது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கேரளாவின் மலப்புரம் லோக்சபா தொகுதியிலிருந்து, எம்.பி.,யாகியுள்ள அகமது, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary:

NEW DELHI: Barley., Collapsed during an appearance at a meeting of the Kerala MP, Ahmed died from a heart attack.

Source: பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top