காம்பியா சிறை துறையின் முன்னாள் தலைவர் கைது
borra kolin, devil guinea, former chief commander, gambia, world January 28, 2017,
கினி-பிசாவை கடக்க முயற்சிக்கையில், காம்பியா சிறை துறையின் முன்னாள் தலைவர் தளபதி போரா கோல்லேயை கைது செய்ததாக செனகல் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவர், பின்னர் செனகல் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டதாக, காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
சித்ரவதை மற்றும் தன்னிச்சையான மரண தண்டனைகள் உள்பட பெருமளவிலான அரசியல் மற்றும் சமூக அடக்குமுறைகள் முன்னாள் அதிபர் யாக்யா ஜாமே ஆட்சியில் சிறைகளில் நடைபெற்றதாக மனித உரிமை குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
கடந்த சனிக்கிழமையன்று யாக்யா ஜாமே நாட்டைவிட்டு வெளியேறி செல்ல, செனேகல் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
English Summary:
To try to overcome the Devil Guinea, Gambia, former chief commander of the prison department of the Senegalese police arrested Borra kolin said.
Source: காம்பியா சிறை துறையின் முன்னாள் தலைவர் கைது – G-News
Leave a comment
You must be logged in to post a comment.