பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்

chennai, government, Jallilkattu, tamil nadu
சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக கடந்த புதன்கிழமை (18.01.2017) முதல் பெரும்பாலான கல்லுாரிகள் விடுமுறை அறிவித்திருந்தன. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அது நாளை சட்டசபையில் சட்ட முன்முடிவாக தாக்கல் செய்யப்பட்டு
நிரந்தர சட்டமாக மாற்றப்படும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அண்ணா பல்கலை.,க்கு கீழ் இயங்கும் அனைத்து இன்ஜி., கல்லுாரிகளும் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

English summary:

Chennai: Tamil Nadu All around the school, the College runs from tomorrow, as usual, the government announced. 

Source: பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top