திருச்சியில் ஜல்லிக்கட்டு; 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன
Jallilkattu, pudukottai, sandstone, tamil nadu, trichy January 22, 2017,
திருச்சி: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி அருகே மணப்பாறை மற்றும் புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என மெரினா, அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. புதுக்கோட்டையில் ராப்பூசல் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
English summary:
Trichy: hold jallikattu ordinance was issued, followed SANDSTONE near Trichy and jallikattu held in Pudukkottai.
Source: திருச்சியில் ஜல்லிக்கட்டு; 10க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன – G-News
Leave a comment
You must be logged in to post a comment.