பீட்டாவை கண்காணிக்க வேண்டும்: பொன்.ராதா
New delhi, pon radha krishnan, union ministry January 20, 2017,
புதுடில்லி: பீட்டா அமைப்பை அரசு கண்காணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து பா.ஜ.,மாநில தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ., குழுவினர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தாவேவை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பீட்டா அமைப்பை அரசு கண்காணிக்க வேண்டும். அவர்கள் தேவையில்லாமல் நமது பாரம்பரிய முறையில் தலையிடுகிறார்கள். பிரச்னையை தீர்க்க மத்திய சுற்றுச்சுழல் அமைச்சரை சந்தித்தோம் . உள்துறை அமைச்சரையும் சந்திப்போம் எனக்கூறினார்.
English summary:
NEW DELHI: Union minister pon beta system to monitor the state said. Jallikattu for and demanding a ban on beta-setting battle is going across. Subsequently, BJP state president Tamilisai, including Federal Minister pon BJP delegation met with Federal Environment Minister Dave discussed regarding jallikattu.
Source: பீட்டாவை கண்காணிக்க வேண்டும்: பொன்.ராதா – G-News
Leave a comment
You must be logged in to post a comment.