ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது
chennai, Jallilkattu, students, SupportJallikattu, tamil nadu, transport, workers January 20, 2017,
சென்னை – ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், ஜல்லிக்கட்டுக்குத் தடையாக உள்ள பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.கடையடைப்பு :
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர் நல அமைப்புகள், விவசாய சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இன்று 20-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்தன. இதைத் தொடர்ந்து தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்குகிறது. இதனால் இன்று 20-ம் தேதி ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது. தமிழகத்தில் 10 லட்சம் வாகனங்கள் ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
English summary:
Chennai – Jallikattu today in support of the auto, van, taxi call Nadu Road Transport Workers Federation has announced that it will not run. Jallikattu in Tamil Nadu will host the competition, jallikattu barrier systems in the beta include demands to ban youth, to support students across Jallikattu are struggling.
Source: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது – G-News
Leave a comment
You must be logged in to post a comment.