ஜல்லிக்கட்டிற்கு சட்டரீதியிலான தீர்வு: ரவிசங்கர் பிரசாத்

government, India, Jallilkattu, New delhi, ravi shankar prasad
புதுடில்லி: ஜல்லிக்கட்டு நடத்த சட்டரீதியிலான தீர்வு ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழகத்தின் கலாசாரத்தை நரேந்திர மோடி அரசு மதிக்கிறது. அமைதியாக நடக்கும் போராட்டம் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் தாவே, அட்டர்னி ஜெனரல் முகில் ரோகத்ஹி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இது தொடர்பாக பா.ஜ., தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன் என்றார்.

English summary:

NEW DELHI: The government is trying to bring the solution to a legal hold jallikattu Law Minister Ravi Shankar Prasad said they were. 

Source: ஜல்லிக்கட்டிற்கு சட்டரீதியிலான தீர்வு: ரவிசங்கர் பிரசாத் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top