ஒரு வாரத்திற்கு தீர்ப்பு வெளியாகாது: சுப்ரீம் கோர்ட்
federal government, India, Jallilkattu, New delhi, supreme court January 20, 2017,
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக, அவசர சட்டம் பிறப்பிக்க முதல்வர் ஓ.பி.எஸ்., நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பிரதமர் மோடியும் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக இருக்கும் என்றார். இதன்படி அவசர சட்டம் பிறப்பிக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுப்ரீம் கோர்ட் ஏற்பு :
இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவசர சட்டம் கொண்டு வரவுள்ள நிலையில் கோர்ட் தீர்ப்பு ஏதும் வழங்கி இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் முகுல்ரோத்தகி இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு வாரத்திற்கு எவ்வித தீர்ப்பும் வழங்க கூடாது. தமிழ அரசின் நடவடிக்கையில் கோர்ட் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்று கொண்டு அவ்வாறு இருக்க நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.
English summary:
NEW DELHI: The Supreme Court will issue a verdict jallikattu a week in the case of the Federal Government approved.
Source: ஒரு வாரத்திற்கு தீர்ப்பு வெளியாகாது: சுப்ரீம் கோர்ட் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.