ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளம் எழுத்தாளர்: சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு

sahitya academy, tami nadu, tirunelveli, yuva puraskaar saravanakumar lakshmi
திருநெல்வேலி : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதில் கிடைக்காவிட்டால் தமக்கு சாகித்ய அகாடமி வழங்கிய யுவ புரஸ்கார் விருதினை மத்திய அரசிடம் திருப்பியளிக்க போவதாக லஷ்மி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

இளம் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார், திரைப்பட இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். படைப்புலகத்தில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக சாகித்யஅகாடமி ‛யுவபுரஸ்கார்’ என்னும் இளையோர் விருதினை வழங்கிவருகிறது. தமிழில் 2016ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது, ‛கானகன்’ நாவலை படைத்த லஷ்மி சரவணகுமாருக்கு வழங்கப்பட்டது. இது,பளியர்களின் வாழ்வியல் குறித்த படைப்பு. ‛தமிழகம் முழுவதும் நடந்துவரும் தமிழ்பண்பாட்டை காக்கும் போராட்டத்தின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ள லஷ்மி சரவணகுமார், இன்று 19ம் தேதி மாலைக்குள் இதற்கு ஆதரவான பதிலை மத்திய அரசு அறிவிக்காவிட்டால் நாளை 20ம் தேதி சென்னையில் உள்ள சாகித்யஅகாடமி அலுவலகத்தில் தமது விருதினை திரும்ப அளிக்க உள்ளதாக முகநுாலில் தெரிவித்துள்ளார்.

English summary:

Tirunelveli: Jallikattu available to them in support of the response provided by the Sahitya Academi Award for Yuva Puraskaar Saravanakumar Lakshmi said that it would repay the government. 

Source: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளம் எழுத்தாளர்: சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top