தீவிரவாதத்தில் இருந்து பாகிஸ்தான் விலகினால்தான் பேச்சு வார்த்தை : பிரதமர் மோடி உறுதி
India, jammu kashmir, narendra modi, New delhi, pakistan January 19, 2017,
புதுடெல்லி – தீவிரவாதத்தில் இருந்து பாகிஸ்தான் விலகி நடந்தால்தான் அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவிற்கு அருகே உள்ள தேசமான பாகிஸ்தான் தனது எல்லை வழியாக இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர் , பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதிகள் மூலமாக தாக்குதல் நடத்துகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதியன்று இரவு பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
அவர் ராணுவ வீரர்கள் உடையில் வந்து இந்த தாக்குதல்களை நடத்தினார்கள் . இதில் 7 வீரர்கள் பலியானார்கள். இதேப்போன்று தாக்குதல் நடத்திய 6 பாகிஸ்தான் தீவிரவாதிகளும் நமது வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தானில் முகாமிட்டு தீவிரவாத பயிற்சி எடுத்து வரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதை ஒன்றையே கருத்தில் கொண்டுள்ளன. அந்த தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிதி உதவி, பயிற்சி போன்ற ஆதரவுகளை அளித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.
English Summary:
NEW DELHI – Pakistan away from extremism the country to hold talks with Prime Minister categorically said that. The nation of Pakistan near its border with India, the Indian state of Jammu and Kashmir, Punjab attack by militants in the states.
Source: தீவிரவாதத்தில் இருந்து பாகிஸ்தான் விலகினால்தான் பேச்சு வார்த்தை : பிரதமர் மோடி உறுதி – G-News
Leave a comment
You must be logged in to post a comment.