ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்று திரளும் மாணவர் சக்தி
chennai, Jallilkattu, student, tamil nadu January 18, 2017,
சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.வகுப்புக்கள் புறக்கணிப்பு :
சென்னை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக வகுப்புக்களை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக சட்ட, பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மாணவர்களும் வகுப்புக்களை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
மனிதசங்கிலி :
சென்னை, மறைமலைஅடிகள் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து மனிதசங்கிலி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கரூர், கடலூர், திருவாரூர், திருவள்ளூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
English Summary:
Chennai: The number of students involved in the fight jallikattu is increasing minute by minute. Jallikattu students are protesting in all parts of the state.
Source: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்று திரளும் மாணவர் சக்தி – G-News
Leave a comment
You must be logged in to post a comment.