ஜல்லிக்கட்டு நடக்கும் வரை ஓயாது போராட்டம் : மாணவர்கள் முழக்கம்
chennai, jallikattu, struggle, tamil nadu January 18, 2017,
சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பொது இடங்களிலும், கல்லூரி வாயில்களிலும் வகுப்புக்களை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒன்றிணையும் மாணவர்கள் :
சென்னை மெரீனாவிலும், மதுரை தமுக்க மைதானத்திலும், கோவை வ.உ.சி., மைதானத்திலும் சுமார் 5000 மாணவர்கள் திரண்டு, நேரம் செல்ல செல்ல போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இது தவிர சென்னை, விருத்தாச்சலம், சிதம்பரம், தேனி, மேலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவம், சட்டம், கலை கல்லூரிகளில் வாயில் முன் அமர்ந்தும், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல பகுதிகளில் கால்நடையாகவும், இருசக்கர வாகனங்களிலும் பேரணியாக சென்று வருகின்றனர். ராமநாதபுரத்தில் மனிதசங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து பகுதியிலும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களும் ஒரே குரலாக, ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் ஓயாது என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
போராட்டம் ஓயாது :
மாணவர்கள் இரவு, பகலாக பனி, வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் போன் டவர் மீது ஏறி சில மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அலங்காரநல்லூர், மதுரை – பரவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை – பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுடன் இணைந்து கிராம மக்களும், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மற்றும் சென்னையில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
English Summary:
Chennai: Tamil Nadu Jallikattu in favor of college students from around the 3rd day of the ongoing struggle is intensifying. Public places, college students boycotted classes and have been agitating for the exits
Source: ஜல்லிக்கட்டு நடக்கும் வரை ஓயாது போராட்டம் : மாணவர்கள் முழக்கம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.