பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த பாக்., பார்லி.,!

islambad, narendra modi, pakistan, world, world terrorism
இஸ்லாமாபாத் : ‛பயங்கரவாதத்தின் தாயகம்’ என பாகிஸ்தானை விமர்சித்ததற்காக பிரதமர் மோடிக்கு, பாக்., பார்லி., கண்டனம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தின் தாயகம்:

கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‛பயங்கரவாத இயக்கங்கள் அனைத்துடனுடம் தொடர்புடைய நாடு பாக்.,’ மற்றும் ‛பயங்கரவாதத்தின் தாயகம்’ என பாகிஸ்தானை விமர்சித்து பேசினார். மோடியின் இப்பேச்சுக்காக பாக்., பார்லி., நேற்று(ஜன.,16)
கண்டன தீர்மானம் கொண்டு வந்தது.

கண்டன தீர்மானம்:

பாக்., பார்லியில் கண்ட தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்கட்சி தலைவர்கள் பேசியதாவது: அடிப்படை ஆதாரமற்ற மோடியின் பாக்., குறித்த கருத்து, காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியே. பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் நிலைப்பாடு எதுவோ, அதுவே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடும். காஷ்மீர் மக்களுக்கு பாக்., பக்க பலமாக இருக்கும். அண்டை நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பிரச்னையில் ஈடுபடுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விவாதத்திற்கு பின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

English Summary:

ISLAMABAD: terrorism, homeland “for criticizing the Pakistan Prime Minister, Narendra Modi, Bach., Barley., Condemned

Source: பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த பாக்., பார்லி.,! – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top