தடையை மீறி தொடரும் ஜல்லிக்கட்டு

jallikattu, salem, tamil nadu, Tamilnadu Police
சேலம்: சேலத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து, தடியடி நடத்திய போலீசார் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமங்கலத்தில் ஆண்டாண்டு காலம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் வெங்கடேசன் என்பவர் காயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

English Summary:

Salem: Salem jallikattu was conducted in violation of the ban. Followed by batons, throwing stones at police and attacked people

Source: தடையை மீறி தொடரும் ஜல்லிக்கட்டு – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top