சுர்ஜித்சிங் பர்னாலா மரணம்: கவர்னர் வித்யாசாகர் ராவ் இரங்கல்

chennai, surjeet singh barnala, tamil nadu, vidyasagar rao
சென்னை : தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா மறைவுக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா மறைவுக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா மரணம் அடைந்ததை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் ஒரு மூத்த அரசியல் மேதையாகவும், தேசியவாதியாகவும் பாராளுமன்ற வாதியாகவும், புத்தி கூர்மை மிகுந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார்.பல மாநிலங்களில் கவர்னராகவும், மத்திய மந்திரியாகவும், பஞ்சாப் முதல் மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட தனது வாழ்வை அர்ப்பணித்தவர்தனக்கு தானே கற்பித்துக் கொண்ட கலைஞனாகவும், பணிவுமிகுந்த, இறைவனிடம் பெரும் பக்தி கொண்ட மனிதராகவும் திகழ்ந்தார். பல புத்தகங்களை எழுதியுள்ளார்.அவரது மறைவு நாட்டுக்கும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா அமைதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English Summary:

Chennai: Tamil Nadu Governor Surjeet Singh Barnala, former Governor vidhyasagar rao condoles demise. 

Source: சுர்ஜித்சிங் பர்னாலா மரணம்: கவர்னர் வித்யாசாகர் ராவ் இரங்கல் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top