செக்ஸ் அடிமைகளாக பெண்கள்: பாக்., ராணுவம் மீது குற்றச்சாட்டு

india terrorism, Lahore, pakistan, pakistan army
லாகூர்: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக, பஸ்துன் இன பெண்களை பாகிஸ்தான் ராணுவம் செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பஸ்துன் இன போராட்டத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளை இடித்துள்ளது. சுவாத் மற்றும் வஜிரிஸ்தான் பகுதியில் வசித்த, 100க்கணக்கான எங்களது இன பெண்களை கடத்தி சென்று லாகூரில் செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் அரசு, பஸ்துன் இனத்தவரை தவறாக வழிநடத்தியுள்ளது. இனிமேலும் நாங்கள் ஏமாற மாட்டோம். பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடுமை காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி, ஆப்கன் உள்ளிட்ட பல நாடுகளில் தங்கியுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக ஆயுதம் தாங்கி போராட குழு அமைத்துள்ளோம். நாங்கள் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். எங்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் ஒரு நாடல்ல. உள்ளூர் மக்களை, மக்களின் மதிப்புகளை அழிக்க முயற்சி நடக்கிறது என்றார்.

English summary:

LAHORE: to provide financial assistance to terrorists, ethnic Pashtun women were used as sex slaves accused the Pakistani army. 

Source: செக்ஸ் அடிமைகளாக பெண்கள்: பாக்., ராணுவம் மீது குற்றச்சாட்டு – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top