அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள் தீவிரம்
awarness, jallikattu, newyork, Richmond, struggle, US, world January 15, 2017,
ரிச்மண்ட்: ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு போரட்டங்கள் அமெரிக்கா முழுவதும் தீ விரமடைந்து ள்ளன. அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் கவிதா பாண்டியன் தமிழக எம்.பி.க்களுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். ரிச்மண்ட், நியூயார்க், பென்டன்வில் நகரங்களைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தமிழர்கள் ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அட்லாண்டா, வாஷிங்டன் டிசி, பால்டிமோர், நியூ ஜெர்ஸி, மினியாபோலிஸ், சியாட்டல் உள்ளிட்ட நகரங்களில் வெள்ளி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற உள்ளன. அமெரிக்கத் தூதரகங்களிலும் கோரிக்கை மனுக்கள் கொடுக்க உள்ளார்கள்.
தமிழக எம்.பி.க்களே மனம் திறங்கள்….
இந் நிலையில் ஜல்லிக்கட்டு போராட்ட அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் கவிதா பாண்டியன், தமிழக எம்.பி. க்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். “சங்க காலம் தொடர்ந்தே, ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடைபெற்று வரும் தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையா
ட்டை நடத்தித் தர தமிழக எம்.பி.க்கள் முன் வரவேண்டும்.
மாட்டினத்தை அழிப்பது தான் நோக்கம்:
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்பு, அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விலங்குளைக் கொன்று குவிக்கிறார்கள். அவர்கள் எப்படி விலங்குகளின் பாதுகாவலர்களாக இருக்க முடியும்? அவர்களுடைய உண்மையான நோக்கம் நமது மாட்டினத்தை அழிப்பதுதான்.என்றார்.
English Summary:
Richmond: jallikattu awareness protests across the United States have been on fire. US Coordinator Kavita Pandya Nadu MPs demanded an emergency. Richmond, New York, in pentan jallikattu awareness of cities has intensified the struggle of the Tamils in the major cities of the US.
Source: அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள் தீவிரம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.