போகி பண்டிகை : புகைமூட்டமான சென்னை நகரம்
bogey festival, chennai, smoke inhalation, tamil nadu January 13, 2017,
சென்னை : போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் குப்பைகளை அதிகளவில் எரித்து வருவதால் சென்னை நகரமே புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
போகி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பழைய பொருட்களை மக்கள் எரித்து வருகின்றனர். சென்னையில் நள்ளிரவு முதலே குப்பைகளை மக்கள் எரித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் ஏற்பட்ட வர்தா புயலில் சாய்ந்த மரங்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டு, காய்ந்த நிலையில் உள்ளன. இவற்றையும் மக்கள் எரித்து வருகின்றனர். ஏற்கனவே நிலவும் பனிமூட்டத்துடன், போகி பண்டிகை குப்பைகள் எரிக்கப்படுவதால் சென்னை நகரமே புகை மூட்டமாக காணப்படுகிறது.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போகி கொண்டாட்டம் காரணமாக மக்கள் குப்பைகளை எரித்து வருகின்றனர். இதனால் காற்றில் மாசு அதிகரித்து, பல இடங்களும் கரும்புகையால் மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
English Summary:
Chennai: Bogey festival people burn garbage being increasingly surrounded by smoke inhalation after the Chennai city.
Source: போகி பண்டிகை : புகைமூட்டமான சென்னை நகரம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.