எலிகளின் மூளையில் கொல்லும் உணர்வை கட்டுப்படுத்தும் பகுதி கண்டுபிடிப்பு

mice, scientists, world
எலிகளுக்கு உள்ள கொல்லும் உள்ளுணர்வை கட்டுப்படுத்தவும், அந்த உணர்வை தூண்டிவிட்டு பின்னர் அமைதிப்படுத்தவும், எலிகளின் மூளையில் இருக்கின்ற பகுதிகளை விஞ்ஞானிகள் இனம்கண்டுள்ளனர்.

எலிகள் இரையை தேடி சென்று கொல்வதற்கு இருக்கின்ற உணர்வையும், அந்த உணவை கடிப்பதற்கு இருக்கின்ற தசைகளையும் ஒருங்கிணைக்கின்ற இரண்டு நரம்பணு இணைகளை (நியூரான்களை) அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் துல்லியமாக இனம்கண்டுள்ளனர்.

‘எலி அச்சத்தால்’ இடைநடுவில் திரும்பிவந்தது ஏர் இந்தியா விமானம்

எலிகள் இரைகளை கொல்வதையும், கடிப்பதையும் தூண்டுகின்ற வகையில் ஆய்வின்போது, லேசர் கதிர் விளக்கு மூலம் இந்த நரம்பணு இணைகள் தகவமைக்கப்பட்டன.

விதைகளை பரப்புவதில் எலி இனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன:

இரையை கொல்லுகின்ற நரம்பணுவை தூண்டியவுடன், அவற்றின் பாதைகளில், போலி பூச்சிகள், பாட்டில் மூடிகள் என எதை பார்த்தாலும் எலிகள் வெறியோடு தாக்கியதை இந்த ஆய்வாளர்கள் அறிய வந்திருக்கின்றனர்.

English summary:

Mice in the control and killer instincts, after stoking the sense of calm that is in the brain of mice, scientists identified areas.

Source: எலிகளின் மூளையில் கொல்லும் உணர்வை கட்டுப்படுத்தும் பகுதி கண்டுபிடிப்பு – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top