ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது : சுப்ரீம் கோர்ட்

India, jallikattu, New delhi, supreme court
புதுடில்லி : ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருவதால், ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது.

தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது:

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என என தமிழக வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது. வழக்கின் தீர்ப்பு தற்போது எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன் தீர்ப்பை வழங்க இயலாது என தெரிவித்தது. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

English summary:

NEW DELHI: The Supreme Court jallikattu does not offer an immediate judgment in the case, said emphatically. Asking for permission to conduct jallikattu mounting protests across the jallikattu expected to come to a speedy decision in the case. The tournament will take place this year in the hope that arose jallikattu.

Source: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது : சுப்ரீம் கோர்ட் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top