தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய்க்கு வழிவகுக்கிறது : மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
extreme stress, heart disease, world January 12, 2017,
தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு மிகவும் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் நம்புகின்றனர்.
மூளையில் பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு எதிர்வினையாற்றும் பகுதியில் அதிக செயல்பாடு இருக்கும் பட்சத்தில் அது எலும்பு மஜ்ஜை பகுதியில் கூடுதலான வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன் காரணமாக இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்புகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது.
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாள்ரகள், சுமார் நான்கு ஆண்டுகளாக 300 பேரின் மூளைகளை ஸ்கேன் மூலம் நுட்பமாக கண்காணித்துள்ளனர்.
மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பானது தி லேன்சட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
English summary:
Why extreme stress increases the risk of heart disease and stroke is very near to the realization that the doctors believe.
Source: தீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய்க்கு வழிவகுக்கிறது : மருத்துவர்கள் கண்டுபிடிப்பு – G-News
Leave a comment
You must be logged in to post a comment.