தத்து எடுக்க புதிய விதிமுறைகள்; 16ம் தேதி முதல் அமல்

government, India, New delhi, new rules
புதுடில்லி : குழந்தைகளை தத்து எடுப்பதற்கான புதிய விதிமுறைகளை வகுத்துள்ள மத்திய அரசு, அவை 16-ந் தேதி அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

புதிய விதிகள்:

நாடு முழுவதிலும் ஆதரவற்ற குழந்தைகள் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. அதேசமயம், ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகளை மட்டும் தத்தெடுக்கலாம் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தத்து எடுப்பதை எளிமையாக்கும் நோக்கில் புதிய விதமுறைகளை மத்திய தத்தெடுப்பு ஆணையம் வகுத்துள்ளது. இப்புதிய விதிமுறைகள் வரும் 16ம் தேதி(
ஜன.,16) முதல் நடைமுறைக்கு வருகிறது.

சட்டப்படி..

புதிதாக வகுப்பட்ட விதிமுறைகளின் படி, இனி உறவினர்களின் குழந்தைகளையும் தத்து எடுக்கலாம். மேலும் 2வது திருமணம் செய்த பெற்றோர்கள் தங்களது முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ளலாம். இப்புதிய விதிமுறைகள் மூலம் தத்து எடுத்தவர்கள் சட்டப்படி குழந்தைக்கு பெற்றோர் ஆக முடியும்.

English summary:

NEW DELHI: The government planned to adopt the new rules, which come into effect on March 16, it says.

Source: தத்து எடுக்க புதிய விதிமுறைகள்; 16ம் தேதி முதல் அமல் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top