மற்ற கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்ன வித்தியாசம் ? ஹசாரே வருத்தம்

anna hazare, cm, Delhi, India, kejriwal
புதுடில்லி: சமூகத்தில் பெரிய மாற்றம் கொண்டு வருவேன் என அளித்த வாக்குறுதியை டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நிறைவேற்றவில்லை என சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

என்ன வித்தியாசம்:

இது தொடர்பாக டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலுக்கு ஹசாரே எழுதிய கடிதம்: நன்கொடையாளர்கள் அளித்த பணம் தொடர்பான பணத்தை கட்சியின் இணையத்தில் வெளியிடுவேன் என எனக்கு நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், நன்கொடையாளர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், கடந்த ஜூன் மாதம் முதல் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகள் பற்றிய விபரம் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சமூகத்தில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வருவேன் எனக்கு நீங்கள் உறுதிமொழி அளித்தீர்கள். ஆனால், நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது வருத்தமாக உள்ளது எனக்கூறியுள்ளார்.

நன்கொடையாளர்கள் மிரட்டல்:

இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மியின் பொருளாளர் ராகவ் சத்தா, ஹசாரேவை காங்கிரஸ் தலைவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர். போலீசார் மற்றும் உளவுத்துறையினர் மூலம் நன்கொடையாளர்களை பா.ஜ., மிரட்டி வருகிறது. ஆம் ஆத்மிக்கு கிடைக்கும் நன்கொடைகளில் 92 சதவீதம் பணம் வெளிப்படையாக வசூலிக்கப்படுகிறது. கட்சிக்கு இணையதள வங்கி சேவை, டெபிட் மற்றும் கிரடிட் கார்டு மூலம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்றார்.

English summary:

New Delhi: Delhi Chief Minister promised to bring change in society, Kejriwal, Anna Hazare has said that has not been fulfilled

Source: மற்ற கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்ன வித்தியாசம் ? ஹசாரே வருத்தம் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top