போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் முயற்சி: பா.ஜ.க

BJP, Black money, congress, India, mumbai, rahul gandhi

மும்பை:கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் முயற்சிக்கிறார் என பா.ஜ.க .,விமர்சித்துள்ளது.

இது குறித்து மும்பையில் பா.ஜ.க .,மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஷா நவாஸ் ஹுசேன் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஊழல் இல்லாத நாடு:

கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தில் நமது நாடு தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளே காரணமாகும். நாட்டை காங்கிரசின் ஊழலில் பிடியிலிருந்து அவர் ஏற்கெனவே விடுவித்தார். அதேபோல், நாட்டை ஊழல் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
ராகுல் தெரிவிக்கும் அடிப்படை முகாந்திரமில்லாத குற்றச்சாட்டுகளும், தேவையில்லாத கருத்துகளும், கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தும். ஆனால், தனது முயற்சியில் ராகுலுக்கு வெற்றி கிடைக்காது என்றார் ஷா நவாஸ் ஹுசேன்.

English summary:

Mumbai: Congress leader Rahul is trying to weaken the fight against black money as the BJP., Commented. Mumbai BJP in this regard., The senior leader and MP Shah Nawaz Hussain told reporters yesterday, said:

Source: போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் முயற்சி: பா.ஜ.க – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top