கேரள கூட்டுறவு வங்கிகளில் அதிரடி சோதனை

cbi, tamil nadu, thiruvananthapuram
திருவனந்தபுரம் : கூட்டுறவு வங்கிகளில் ஹவாலா பணம் அதிக அளவில் டிபாசிட் செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நவம்பர் 8 ம் தேதி முதல் நவம்பர் 14 ம் தேதி வரை போலி கணக்குகளை பயன்படுத்தி அதிக அளவில் பணம் டிபாசிட் செய்யப்பட்டதாகவும், இவற்றில் பெரும்பாலான தொகை ஹவாலா பணம் எனவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில் கண்ணூர், கோழிக்கோடு, திரிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அமலாக்கத்துறையினரும், கொல்லம், மணப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

English Summary:

On this basis, Kannur, Kozhikode, Thrissur and cooperative banks in areas amalakkatturaiyinarum, Kollam, CBI officials raided manappuram areas are included.

Source: கேரள கூட்டுறவு வங்கிகளில் அதிரடி சோதனை – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top