கவர்னருடன் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு
chennai, governor, O paneer selvam, tamil nadu, vidyasagar rao December 19, 2016,
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்.
நாளை டில்லி செல்கிறார்:
முதல்வர் பன்னீர் செல்வம் நாளை டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் வர்தா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், பார்லிமென்ட் வளாகத்தில் ஜெயலலிதா சிலையை வைக்கவும் பிரதமரிடம், முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை கடிதம் அளிக்க உள்ளார்.
கவர்னருடன் சந்திப்பு:
இந்நிலையில், இன்று மாலை கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்வர் பன்னீர் செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, தலைமை செயலாளர் ராமமோகன ராவ், தமிழக அரசின் ஆலேசாகர் ஷீலா பாலகிருஷணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Source: கவர்னருடன் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு – G-News
Leave a comment
You must be logged in to post a comment.