ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு

India, New delhi, Reserve bank of india
புதுடில்லி: பழைய 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய, ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு விதித்துள்ளது.
மத்திய அரசு, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை நவ.,8 ம் தேதி வாபஸ் பெற்றது. அதன் பிறகு, அந்த கரன்சி நோட்டுகளை எந்த தேதி வரை எங்கெங்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கடைசியாக, டிச.,15ம் தேதிக்கு பிறகு, அந்த நோட்டுகளை எங்கும் பயன்படுத்த முடியாது; வங்கிகளில் மட்டும் டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

புதுக்கட்டுப்பாடு:

இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி புது உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை ஒரு வங்கிக் கணக்கில், ஒரு முறை 5,000 ரூபாய் மேல் டெபாசிட் செய்ய முடியும். அதுவும், இந்த நடைமுறை, டிச.,30 வரை மட்டுமே என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

English Summary:

NEW DELHI: The old 500 and 1,000 banknotes to be deposited into the bank account, the Reserve Bank has issued a new regulation. 

Source: ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top