தொடருது காலில் விழும் கலாச்சாரம்: சசிகலாவுக்கும் அதே மரியாதை

AIADMK, chennai, jayalalitha, politicians, sasikala, tamil nadu


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும் அவரது காலில் விழும் கலாச்சாரத்தை தற்போதைய அமைச்சர்களும் கடைபிடித்து அதனை துவக்கிவிட்டனர்.

இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். அங்கு சசிகலாவும் வந்திருந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெ., உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் சிலர் அருகே நின்றிருந்த சசிகலா காலில் திடீரென விழுந்து வணங்கினர். இதன் காட்சி டி.வி.,களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது அந்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய அரசியலில், வயது வித்தியாசம் இன்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.கள், கட்சி நிர்வாகிகள் ஜெ.,காலில் விழுவதை கலாச்சாரமாக வைத்திருந்தனர். அதே கலாச்சாரம் இன்று அரங்கேறியது.

தற்போது ஜெ.,மறைந்ததையடுத்து அவரது இடத்திற்கு வர துடிக்கும் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி உட்பட பல அமைச்சர்கள் ஜெ.,படத்திற்கு மலர் தூவி , சசிகலா காலில் விழுந்து வணங்கி சென்ற காட்சி வீடியோக பதிவாகியுள்ளது.

English Summary:

Chennai: Former Chief Minister and ministers adopted the current culture it triggered a fall at his feet disappear.

Source: தொடருது காலில் விழும் கலாச்சாரம்: சசிகலாவுக்கும் அதே மரியாதை – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top