Home / andaman and nicobar islands / bay of bengal / India / New delhi / கனமழை: அந்தமானில் சிக்கிய 800 பயணிகள் மீட்பு
கனமழை: அந்தமானில் சிக்கிய 800 பயணிகள் மீட்பு
andaman and nicobar islands, bay of bengal, India, New delhi December 7, 2016, by
புதுடில்லி: வங்க கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதால், அந்தமான் நிகோபார் தீவுகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்தமான் தீவில் சிக்கிய, 800 பயணிகளை கடற்படை கப்பல்கள் மீட்டுள்ளன.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‛ விசாகப்பட்டினத்திற்கு தெற்கே, தென்கிழக்கு பகுதியில், 1,260 கி.மீ., தூரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, அந்தமான் நிகோபார் தீவுகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும்’ என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரில் இருந்து 41 கி.மீ.,தொலைவில் உள்ள ஹேவ்லாக் தீவில் சிக்கியுள்ள, 800 பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை கடற்படை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
English Summary:
Storm in the Bay of Bengal has become a symbol, the Andaman and Nicobar Islands has been heavy rain. As a result, trapped in Andaman island, about 800 passengers rescue naval ships.
Source: கனமழை: அந்தமானில் சிக்கிய 800 பயணிகள் மீட்பு – G-News
Post Views: 263
Recent Posts
- CPI: நூறாண்டைத் தொட்ட சிபிஐ; இந்தியாவில் வளர்ந்தது எப்படி? – வரலாறு சொல்லும் தகவல்!
- சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' – ராமதாஸ் தரப்பு புகார்
- தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! – தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
- 'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!
- ஓடும் காரில் பெண் ஐடி ஊழியர் பாலியல் பலாத்காரம்.. நிறுவனத்தின் சி.இ.ஓ, கணவன் – மனைவி கைது..!
Leave a comment
You must be logged in to post a comment.