அரைக்கம்பத்தில் பறந்த அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது
Uncategorized December 5, 2016,தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவில் இருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே திங்கள்கிழமை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில் அவர் காலமானார் என்று தவறான தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவல் உண்மை இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும் கூடுதல் மருத்துவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Source: அரைக்கம்பத்தில் பறந்த அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது – G-News

Leave a comment
You must be logged in to post a comment.