தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பயிர் கடன் வழங்கும் விழா

agriculture, tamil nadu, Tindivanam
திண்டிவனம்:திண்டிவனத்தில் நடந்த அரசு விழாவில், அரசு சார்பில், விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான கடனை, அமைச்சர் சண்முகம் வழங்கினார்.

திண்டிவனம்-மரக்காணம் ரோட்டிலுள்ள சக்கரபாணி திருமண நிலையத்தில், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு, பயிர்க்கடன் வழங்கும் விழா நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்திரசேகர் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளிரகுராமன், எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு, புதிய திட்டத்தின் கீழ் 250 விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 85ஆயிரம் மதிப்பிற்கு கடனை வழங்கினார்.

விழாவில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிவர்மன், கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், வீடு கட்டும் சங்க தலைவர் தளபதிரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர், முன்னாள் சேர்மன் சிவா, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், மாணவரணி அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம் சரக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் பானு நன்றி கூறினார்.

English Summary:

Tindivanam: Tindivanam, on the occasion of the state, on behalf of the government, farmers loan worth Rs .58 lakh 85 thousand, presented by Minister Shanmugam. 

Source: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பயிர் கடன் வழங்கும் விழா – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top