சவுதி புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்
plane, riyadh, world December 3, 2016,ரியாத்:இந்தியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானத்தை இயக்கிய விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சவூதிய அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தின் பைலட் விமானத்தை இயக்கி கொண்டிருந்த பொழுது அவருக்கு திடீர் உடல்நக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தை இயக்கிய துணை விமானி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் விமானிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் விமானம் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary:
Riyadh: Saudi departing from India and directed the pilot to fly the plane and landed in Pakistan due to illness.
Source: சவுதி புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம் – G-News

Leave a comment
You must be logged in to post a comment.