மீட்கப்பட்ட இளைஞர்கள் : மத்திய அமைச்சருக்கு நன்றி
politicians, radhakrishnan, tamil nadu December 3, 2016,
சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால், ஷார்ஜாவில், கப்பல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட, மூன்று தமிழக இளைஞர்கள், நேற்று அவரை சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.நாகை, தஞ்சை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, மூன்று இளைஞர்கள், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் பணிக்காக சென்றனர்.
அங்கு கப்பலில், பல நாட்களாக, அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தகவலை, பெற்றோர் மூலம் அறிந்து, அவர்களை மீட்க, பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று சென்னை வந்த அவர்கள், பொன்.ராதாகிருஷ்ணனை, கமலாலயத்தில் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
English Summary:
Chennai: Union Minister pon.Radhakrishnan initiative, Sharjah, the ship recovered from the three Indian youth, yesterday met him, told thanks , Thanjavur, Karur in the districts, three teenagers, a Chennai-based private company from the United Arab Emirates in Sharjah missions carried .
Source: மீட்கப்பட்ட இளைஞர்கள் : மத்திய அமைச்சருக்கு நன்றி – G-News
Leave a comment
You must be logged in to post a comment.