சிலை கடத்தல் முக்கிய நபர் தற்கொலை
chennai, statue trafficking, sucide, tamil nadu March 8, 2017,
சென்னை: கோவில்களில் சாமி சிலை கடத்தலில் ஈடுபட்டு கைதான தீனதயாளனின் பேரன் ஸ்ரீகாந்த் ஓம்கார், இன்று(மார்ச் 8) தற்கொலை செய்து கொண்டார்.சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த தீனதயாளின் வீட்டு குடோனில் இருந்து, 300க்கும் மேற்பட்ட சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். பின்னர் தீனதயாளன் கைது செய்யப்பட்டார்.
தீனதயாளின் பேரன் ஸ்ரீகாத் ஓம்கார். இவர், சாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்தவர். இவரும் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இன்று, சென்னை, வளசரவாக்கம் வீ்ட்டில் ஸ்ரீகாந்த் ஓம்கார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.