ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு: வெங்கையா நாயுடு
India, New delhi, venkaiah naidu March 1, 2017,
புதுடில்லி: ‛பிரதமருக்கு ஓய்வு அவசியம் என ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு’ என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
உ.பி.,யில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், மோடி களைப்படைந்துள்ளார்; அவருக்கு ஓய்வு அவசியம். அகிலேஷ் மீண்டும் உ.பி., முதல்வராவதன் மூலம் பிரதமருக்கு அவரால் ஓய்வு கொடுக்க முடியும் என பேசியிருந்தார்.
ராகுலின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முக்கிய விவாதங்களின் போது, பார்லி., நடவடிக்கைகளில் பங்கேற்காமல், வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் ராகுல், ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் மோடியை ஓய்வெடுக்க சொல்கிறார். குறுகிய காலத்தில் 40 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள மோடி, சர்வதே அளவில் இந்தியர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளார்.
உள்நாட்டில் அவர் பயணம் மேற்கொள்ளாத மாநிலம் இல்லை. அவர் கவனம் செலுத்தாத பிரச்னையும் இல்லை. காங்கிரசுக்கே, மக்கள் நிரந்தர ஓய்வை தரும் நிலை ஏற்பட்டுள்ளது. ராகுலின் கீழ்த்தரமான பேச்சு கண்டத்திற்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.