நம்பிக்கை ஓட்டெடுப்பு: கூவத்தூரில் இருந்து புறப்பட்டனர் எம்.எல்.ஏ.,க்கள்
chennai, MLA, polling, state assembly election, tamil nadu February 18, 2017,
சென்னை : புதிதாக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,18) நடக்கிறது. காலை 11 மணிக்கு நடக்கும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்வதற்காக, கடந்த 10 நாட்களாக கூவத்தூர் ‛கோல்டன் பே’ ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.,க்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கூவத்தூரில் இருந்து முதலில் அமைச்சர்கள் புறப்பட்டனர். பின்னர் எம்.எல்.ஏ.,க்கள் காரில் புறப்பட்டனர். ஒவ்வொரு காரிலும் 5 எம்.எல்.ஏ.,க்கள் செல்கின்றனர். கார்களில் செல்லும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர்Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.