மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க இயலாது: முதல்வர் பழனிசாமி
tami nadu June 8, 2018,
மேட்டூர் அணையில் குறைவான நீர் இருப்பதால் இந்தாண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க இயலாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட நேரத்தில் அதாவது ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை என தெரிவித்தார். இந்தாண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க மும்முனை மின்சாரம் 12 மணிநேரம் வழங்கப்படும் எனக் கூறிய முதல்வர், ரூ.22 கோடியில் 500 மோட்டார் பம்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சூரிய சக்தி மூலம் மோட்டார் இயக்கும் விவசாயிகளுக்கு 90% மானியம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க இயலாது: முதல்வர் பழனிசாமி