நடுக்கடலில் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

நடுக்கடலில் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

tami nadu

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொ‌ண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன், அவர்களிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். 

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று‌ 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்களை கச்சத்தீவு அருகே கூட நெருங்கவிடாமல், இலங்கை கடற்படையினர் நேற்று இரவு விரட்டியடித்தனர். 50க்கும் அதிகமான படகுகளில், இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். மேலும் இன்று அதிகாலை 3 மணி அளவில், 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை தனுஷ்கோடி – மன்னார் இடையே வழிமறித்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, விரட்டியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல் தடுத்து‌ நிறுத்தப்பட வேண்டும் என கரைதிரும்பிய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> நடுக்கடலில் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

Search

Back to Top