7ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் விமான சேவை தொடங்கியது

7ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் விமான சேவை தொடங்கியது

tami nadu

சேலம் – சென்னை இடையே ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. 

சேலத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான சேவையை தொடங்கி வைத்தனர். காணொலிக் காட்சி மூலம் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவும் விழாவில் பங்கேற்றார். சேலம் விமான நிலையத்தில் புதிதாக சேவையைத் தொடங்கிய விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. தினமும் சென்னையிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம், 10.40 மணிக்கு சேலம் செல்கிறது. சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு 11.50 மணிக்கு செல்கிறது. உடான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள சேலம் – சென்னை இடையிலான விமான பயணத்திற்கு, குறைந்தபட்ச கட்டணமாக ஆயிரத்து 499 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> 7ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் விமான சேவை தொடங்கியது

Search

Back to Top