கட்சி வேலையை முடித்து வீட்டுக்கு வந்த மாணவன் உயிரிழப்பு
tami nadu March 16, 2018,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர் அரவிந்தன் (17) இவர் அருகிலுள்ள அரசு மேனிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். இன்று வீட்டில் இருக்கும் வேளையில் மயக்கம் ஏற்படுவதாக அரவிந்தன் கூறியுள்ளார். இதனையடுத்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் உடனடியாக அரவிந்தனை சிகிச்சைக்ககாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அரவிந்தன் உயிரிழந்ததாக கூறினர். இதனை கேள்விப்பட்ட உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர்.

இதனிடையே உறவினர்கள் கூறுகையில், மேலூரில் டி.டி.வி தினகரன் புதிய கட்சி அறிவிப்பு நிகழ்ச்சிக்காக அரவிந்தன் பதாகைகள் கட்டும் பணிக்காக நேற்று சென்றுள்ளார். பணியை முடித்து வீடு திரும்பிய அவர் உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். அப்போது தான் அரவிந்தன் திடீரென மயக்கமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> கட்சி வேலையை முடித்து வீட்டுக்கு வந்த மாணவன் உயிரிழப்பு