நடிகர் விஷால் விவகாரம்! தயாரிப்பாளர் சங்கம் முக்கிய முடிவு

நடிகர் விஷால் விவகாரம்! தயாரிப்பாளர் சங்கம் முக்கிய முடிவு

Uncategorized

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் மீதான நடவடிக்கையில் தயாரிப்பாளர் சங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து, நடிகர் விஷால் பத்திரிகைக்கு பேட்டியளித்ததைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 14ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்  நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, விஷால் மீதான சஸ்பெண்ட்டை திரும்ப பெறுவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் விஷால் மீதான சஸ்பெண்ட் ரத்து செய்துள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். சென்னையில் இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஷால் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top