முதல் கட்ட மெட்ரோவுக்கே ஆள் இல்லை.. அடுத்த கட்டம் எதற்கு? மத்திய அரசு கேள்வி

முதல் கட்ட மெட்ரோவுக்கே ஆள் இல்லை.. அடுத்த கட்டம் எதற்கு? மத்திய அரசு கேள்வி

tami nadu

சென்னையில் ஏற்கனவே ஓடும் மெட்ரோ ரயில்களுக்கே போதிய வரவேற்பு இல்லாத நிலையில் அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டுவது ஏன் என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு போதிய ஆதரவு கிடைக்காதது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கரை லட்சம் பேர் பயணிப்பார்கள் என மதிப்பிடப்பட்ட நிலையில் 30 ஆயிரம் பேர் மட்டுமே மெட்ரோ ரயிலை பயன்படுத்துகின்றனர் என்று அக்கடிதத்தில் மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையில் ஏற்கனவே ஓடும் மெட்ரோ ரயில்களுக்கே போதிய வரவேற்பு இல்லாத நிலையில் அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டுவது ஏன் என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கிடையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையப் பகுதிகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்காததே எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததற்கு காரணம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> முதல் கட்ட மெட்ரோவுக்கே ஆள் இல்லை.. அடுத்த கட்டம் எதற்கு? மத்திய அரசு கேள்வி

Search

Back to Top