இது 3 வது முறை: ஜெ.தீபா அலுவலகம் மீது நள்ளிரவில் அட்டாக்!

இது 3 வது முறை: ஜெ.தீபா அலுவலகம் மீது நள்ளிரவில் அட்டாக்!

tami nadu

மூன்றாவது முறையாக, ஜெ.தீபா அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. தினகரன் தூண்டுதலின் பேரிலே தாக்குதல் நடந்துள்ளதாக தீபா புகார் கூறியுள்ளார்.

சென்னை திநகர் பாண்டிபஜார் அருகில் உள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று ஆட்டோக்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் கற்களை சரமாரியாக வீசி தாக்கியுள்ளனர். காவலுக்கு இருந்த கட்சி தொண்டர் ஒருவரையும் அந்தக் கும்பல் தாக்கியுள்ளது. உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை துணை ஆணையர் முத்தழகு தலைமையிலான போலீசார், தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டனர். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ‘முன்பு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்த காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர் இ.சி.ஆர்.ராமச்சந்திரன் தான் தொடர்ந்து சமுக வலைத்தளம் மூலம் என்னை மிரட்டி வந்தார். ஆனால் இன்று நேரடியாக கட்சி அலுவலகத்தை தாக்கியுள்ளார், சசிகலா, தினகரன் தூண்டுதலின் பேரில்தான் எங்கள் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது’ என்றார். 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> இது 3 வது முறை: ஜெ.தீபா அலுவலகம் மீது நள்ளிரவில் அட்டாக்!

Search

Back to Top