இன்று முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி: போர் அறிவிப்பு வருமா?
tami nadu December 26, 2017,
நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
சென்னையில் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு 18 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 26 ஆம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கவுள்ளார். 27 ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களையும், 28 ஆம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களையும் ரஜினிகாந்த் சந்திக்க திட்டமிட்டுள்ளார். 29 ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்தும், 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களையும் ரஜினி சந்திக்க இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினி தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது, நாட்டில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்கு சிஸ்டம் சரியில்லை. அரசியலுக்கு வருவது பற்றி இப்போது எதுவும் பேச தேவையில்லை. எதுவும் எனது கையில் இல்லை. ஆண்டவன் கையில்தான் உள்ளது. போர் வரும் வரை காத்திருங்கள் என்றார். அவருடைய இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்திலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> இன்று முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி: போர் அறிவிப்பு வருமா?