திருச்சி அருகே பாலசமுத்திரத்தில் அரசுப் பள்ளி மாணவர் கொலை வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது
Uncategorized March 12, 2023,
திருச்சி: திருச்சி அருகே பாலசமுத்திரம் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பணியில் அலட்சியமாக இருந்ததாக தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது, விளையாட்டாக சிறிய கற்களை வீசியது தொடர்பாக, தோளூர்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கோபி மகன் மவுலீஸ்வரன்(15) என்ற மாணவருடன் சக மாணவர்கள் 3 பேர் தகராறு செய்ததுடன், அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மவுலீஸ்வரன், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
….
Source: Hindu
Read More >> திருச்சி அருகே பாலசமுத்திரத்தில் அரசுப் பள்ளி மாணவர் கொலை வழக்கில் சக மாணவர்கள் 3 பேர் கைது