தண்ணீர் வழங்க சிறப்பு நடவடிக்கை… சென்னை குடிநீர் வாரியம் அதிரடி..!
tami nadu June 14, 2019,
சென்னையில் பெரிய லாரிகள் செல்ல முடியாத பகுதிகளில் டாட்டா ஏஸ் போன்ற சிறிய ரக வாகனங்கள் மூலம் மாநகர குடிநீர் வாரியம் தண்ணீர் வழங்கி வருகிறது.
தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்தப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுச்செல்லும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தண்ணீர் லாரி செல்ல முடியாத இடங்கள், தெருக்களில் வசிக்கும் மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு டாட்டா ஏஸ் போன்ற சிறிய ரக வாகனங்களை தண்ணீர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது சென்னை குடிநீர் வாரியம். கடந்த ஒரு மாதமாக தண்ணீர் கொண்டு செல்லப்படாத பகுதிகளுக்கும் தற்போது தடையின்றி நீர் கொண்டு செல்லப்படுகிறது. சிறிய வாகனங்களில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் நீரேற்றும் நிலையத்தில் இருந்து தண்ணீர் நிரப்பி, நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்து 704 சுற்றுகள் முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 500 சுற்றுகள் தண்ணீர் விநியோகம் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் விநியோகம் தொடர்பாக மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக கூடுதலாக 20 தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தண்ணீர் பெறுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> தண்ணீர் வழங்க சிறப்பு நடவடிக்கை… சென்னை குடிநீர் வாரியம் அதிரடி..!