பள்ளி மாணவர்கள் கரோல் பாடி சென்றபோது தாக்குதல்.. சங்பரிவார் காரணம் என பினராயி விஜயன் குற்றச்சாட்டு..!
Uncategorized December 26, 2025,n
n 
n
n
n
n
n கேரள முதல்வர் பினராயி விஜயன், பாலக்காட்டில் பள்ளி மாணவர்கள் கரோல் பாடி சென்றபோது அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
n
n
n
n இச்சம்பவம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்றும், இதன் பின்னணியில் சங்கப்பரிவார் அமைப்புகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வன்முறை தொடர்பாக அஸ்வின் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
n
n
n
n இந்த விவகாரத்தில், கரோல் பாடி சென்றவர்கள் மது அருந்தியிருந்ததாக பாஜக மாநில பொதுச்செயலாளர் சி. கிருஷ்ணகுமார் கூறியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களின் பெற்றோர்கள் இக்குற்றச்சாட்டிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
n
n
n
n உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய முதல்வர், கேரளாவில் மத பாகுபாட்டை தூண்டும் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
n
n
n
n தபால் நிலையங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் கொண்டாட்டங்களை தடுக்க முயலும் அமைப்புகள் குறித்தும் விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
n
n
n
n Edited by Siva