ஓடும் காரில் பெண் ஐடி ஊழியர் பாலியல் பலாத்காரம்.. நிறுவனத்தின் சி.இ.ஓ, கணவன் – மனைவி கைது..!

Uncategorized

n

n

n

n

n  

n

n ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாளரை ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி , பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

n

n  

n

n காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட பெண் டிசம்பர் 20-ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஒரு பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அனைவரும் மது அருந்தியுள்ளனர். நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, IT நிறுவனத்தின் CEO ஜிதேஷ் பிரகாஷ் சிசோடியா, அவரது பெண் சக ஊழியர் மற்றும் அவரது கணவர் கௌரவ் சிரோஹி ஆகியோர் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக கூறி காரில் அழைத்து சென்றுள்ளனர்.

n

n  

n

n பயணத்தின் போது, காரை ஓரிடத்தில் நிறுத்தி சிகரெட் போன்ற ஒரு பொருளை அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக வழங்கியுள்ளனர். அதனை உட்கொண்ட பிறகு அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். மறுநாள் காலை சுயநினைவு திரும்பியபோது, தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உணர்ந்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

n

n  

n

n இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைகளை முடித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இது திட்டமிடப்பட்ட குற்றமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

n

n  

n

n Edited by Siva

Search

Back to Top