ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்க முடியாது: முதல்வர் ஓ.பி.எஸ்., உறுதி

emergency law, jallikattu, pm, State government, tamil nadu
மதுரை: முதல்வர் பன்னீர்செல்வம் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்’ என, பிரதமர் உறுதியளித்தார். பிரதமரின் உறுதியை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் நீடித்த நிலையான சட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் வாடிவாசல் திறக்கப்பட்டு முதல் கட்டமாக அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லுாரில் மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும். ஜல்லிக்கட்டை இனி யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

English summary:

Jallikattu accept the Prime Minister’s determination was issued ordinance. The emergency law, sustainable law with the State Government

Source: ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்க முடியாது: முதல்வர் ஓ.பி.எஸ்., உறுதி – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top