3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் ஆசிரியர், மாணவர்கள் 4 பேர் கைது

arrest, raped teacher, students, tamil nadu, tirunelveli
திருநெல்வேலி:மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திய பள்ளி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள கீழகரிசல்குளத்தில் உள்ள துவக்கப்பள்ளி
ஒன்றில் அதே ஊரைச்சேர்ந்த எட்டுவயது சிறுமி மூன்றாம் வகுப்பு பயின்றுவந்தார். அதே ஊரைசேர்ந்த மூன்றுமாணவர்கள்.மூவரும் 16, 17 வயதுடையர்கள். இருவர் ராயகிரியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பும், ஒரு மாணவன்பிளஸ் 2 பயில்கின்றனர். கீழகரிசல்குளத்தில் அந்த சிறுமியிடம் கடந்த சில தினங்களாக பாலியல் ரீதியாக பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் புகாரின் பேரில் மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒரு சிறுவனை தேடிவருகின்றனர்.

8 மாத கர்ப்பம்..!: 

நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே சில தினங்களுக்கு முன்பு 13 வயது சிறுமியை பக்கத்துவீட்டில் வசிக்கும்14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டான். விஷயம் வீட்டுக்கு தெரியவில்லை.தற்போது அச்சிறுமி எட்டு மாத கர்ப்பமாக உள்ளார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சமூகநலத்துறை பணியாளர் புகாரின் பேரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

தலைமையாசிரியர் கைது:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நம்பிராஜன் 49.இவர் அங்கு பயிலும் ஐந்தாம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சமூகநலத்துறை பணியாளர் புகாரின் பேரில் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

நெல்லையில் கடந்த மூன்று நாட்களில் சிறுமிகளுக்கு நேர்ந்த பாதிப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top